கிராமம் மற்றும் நகரத்தில் இருக்கும் குல மக்களை ஒன்று சேர்க்க ஒரு பாலமாக திகழ சங்கம் ஒன்று தேவைப்பட்டது. நமது குல மக்களுக்காக சைவ நெறியை பின்பற்றி இயங்கும் ஒரு சங்கமும் பத்திரிக்கையும் தேவை என்ற பெரும்பாலோரின் விருப்பத்திற்கேற்ப கருணீகர் சங்கம் தாம்பரம் (Karuneegar Sangam Tambaram) என்ற பெயரில் (450/93) பதிவு செய்யப்பட்டு கருணீகர் குரல் என்ற மாத இதழுடன் இயங்கி வருகிறது.
இச்சங்கம் சிறுவர்களுக்கு பள்ளிக்கூடமாகவும், இளைஞர்களுக்கு எழில்மிகு பயிற்சி நிலையமாகவும், முதியவர்களுக்கு புனிதத் தலமாகவும் விளங்க வேண்டும் என்பதற்காக பத்திரிக்கை ஆரம்பித்து அதில் நம் குலத்தவர்களுக்கு தேவையான செய்திகள் வெளியிட வேண்டும். அதில் மக்களின் பண்புகள், திறமைகள் மற்றும் சிறப்புகளை ஏற்றத் தாழ்வின்றி வெளியிடும் சாதனமாக திகழ வேண்டும் என்பதற்காக ஆரம்பிக்கப்பட்டது.
இந்த சங்கத்தின் மூலதனம் உண்மை, தியாக மனப்பான்மை மற்றும் வியாபார நோக்கமின்மை ஆகும்.
சங்கத்தில் உள்ள உறுப்பினர்களுக்கு திருமணம், கல்வி ஊக்கத்தொகை, வேலைவாய்ப்பு ஆலோசனைகள், மாதந்தோறும் உறுப்பினர்களின் இல்லத்தில் கூட்டம், ஆன்மீக அருட்ப்பயணம் மற்றும் ஆண்டுக்கொரு முறை ஆண்டு விழா என்ற அடிப்படையில் இயங்கி வருகிறது. சிறப்பாக செயல்படுவோருக்கு பாராட்டு மடல் வழங்கப்படுகிறது.
Education
Matrimony
Medical Support
Spirituality
Welfare Fund
சங்கத்தின் நிறுவனராகவும் முன்னாள் செயலாளராகவும் இருந்து கருணீகர் சங்கத்தின் அடிப்படை கட்டமைப்பு மற்றும் கொள்கைகளை வடிவமைத்து வழிநடத்திய பெருமைக்குரியவர். தாம்பரம் பகுதியில் மக்களின் முன்னேற்றத்திற்காக அரும்பணியாற்றினார்.
நமது சங்கத்தின் நிறுவனரின் புதல்வரும், முன்னாள் செயலாளருமான இவர், தன் தந்தையைப் போலவே சங்கத்திற்கு வருவோரை எப்போதும் இன்முகத்தோடு வரவேற்கும் பண்பாளர். அவரின் மறைவு நமது சங்கத்திற்குப் பேரிழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் இத்தருணம் ஆராத் துயரத்தை அளிக்கிறது.நமது சங்கத்தை மேலும் வளர்த்தெடுக்க வேண்டும் என்பதும், நமது அதிகாரப்பூர்வ இணையதளத்தை நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் மேம்படுத்த வேண்டும் என்பதுமே இவரின் முதன்மையான ஆசைகளாக இருந்தன. அவரின் இந்த லட்சியக் கனவுகளை நனவாக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும்
சங்கத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்து வழிநடத்தும் முக்கிய நிர்வாகிகள்
தொழில்நுட்ப நிறுவனத்தை வழிநடத்தும் ஆளுமை மிக்க ஒரு இயக்குனர், சமுதாயப் பேரியக்கத்தின் தலைவராகப் பொறுப்பேற்பது அந்தச் சமூகத்திற்குக் கிடைத்த மாபெரும் வரப்பிரசாதமாகும். இத்தகைய நவீனத் தொழில்நுட்ப அறிவும், உலகளாவிய தொலைநோக்குப் பார்வையும் கொண்ட தலைவர்களால் மட்டுமே, இன்றைய அதிவேக எண்ணிம (டிஜிட்டல்) யுகத்திற்கு ஏற்பச் சமுதாயத்தை அடுத்த கட்டத்திற்குத் துணிவோடு அழைத்துச் செல்ல முடியும். பொருளாதார அரங்கில் முத்திரை பதித்து, இன்று சமுதாயத்தின் சிற்பியாகவும், வழிகாட்டியாகவும் திகழும் இத்தலைவரின் அரிய பயணம், எதிர்காலத் தலைமுறையினரின் நெஞ்சில் சாதனைப் பொறிகளை மூட்டும் ஒரு மாபெரும் உந்துசக்தியாகும்!
The appointment of a dynamic director who leads a technology company as the leader of a major social movement is a magnificent boon for that society. Only leaders possessing such modern technological knowledge and a global foresight can courageously guide society to the next level, in alignment with today’s fast-paced digital era. Having left a distinct mark in the economic arena and now shining as a sculptor and mentor of society, this leader’s rare journey is a phenomenal driving force that will ignite the sparks of achievement in the hearts of future generations!
சமூகச் செயல்பாடுகள் ஒருங்கிணைப்பு, உறுப்பினர்கள் மேலாண்மை மற்றும் சமூக நிகழ்வுகளைத் திட்டமிட்டு ஒருங்கிணைத்து நடத்துதல்.
Specializes in operational execution, community organizing, member coordination, and event planning.
நிதித் திட்டமிடல், பட்ஜெட் தயாரிப்பு, கணக்கு மேலாண்மை மற்றும் சங்கத்தின் நிதி ஆதாரங்களை நேர்மையுடன் நிர்வகிப்பதில் சிறந்தவர்.
Expertise in financial planning, budgeting, accounting, audit supervision, and secure fund management.
எங்கள் சங்கத்தின் வளர்ச்சிக்கும் செயல்பாடுகளுக்கும் முன்னின்று உழைக்கும் நிர்வாகிகள்